திரிபோசா வழங்கப்படாமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு !

breaking

இலங்கை ;-

திரிபோசா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் (Colombo) இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ (Samal Sanjeeva)  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

6 மாதங்களுக்கும் அதிகமான 3 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு திரிபோசா வழங்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.

இந்த வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளே அதிகமாக போசனை குறைபாட்டிற்கு உள்ளாகி வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.