சேவல் சண்டை யால் நாடொன்றில் 20 பேர் பலி!

breaking

மெக்சிகோவில் சேவல் சண்டை விடுவதில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.

அதிகாரத்திற்காக போட்டியிடும் இரு போதைக் கும்பலிடையே நடந்த ரகசிய சேவல் சண்டையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் போதைக் கும்பல்கள் தங்களுக்குள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் பெண்கள் உள்பட 20 பேர் கொல்லப்பாட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் கூறினர்.